0 Comments
Published on: Wednesday, July 29th, 2020 at 10:08 PM
ஊரடங்கு தளர்வு 3.0 – எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?
ஊரடங்கு தளர்வு 3.0வில் இந்தியா முழுவதும் உள்ள இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் சுமார் 4 மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊர்டங்கு தளர்வு 2.0 நடைமுறையில் உள்ள நிலையில், ஊரடங்கு தளர்வு 3.0 தொடர்பான புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எதற்கெல்லாம் தளர்வு
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை தனிமனித இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு குறைவான எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் தடை நீட்டிப்பு
பள்ளி, கல்லூரிகள் செயல்பட ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 வரை சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, பண்பாடு, மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.
மெட்ரோ ரயில் சேவை, வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், பார்கள், ஆடிட்டோரியம் ஆகியவையும் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments yet