0 Comments
Published on: Tuesday, June 23rd, 2020 at 6:51 PM
டிரம்பை நேரடியாக எதிர்த்த சுந்தர் பிச்சை… என்ன காரணம்?
எச்-1பி விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்யப்பட்டதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எச்1பி விசாவை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதால், அங்கு பணிபுரியும் 5 லட்சம் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்பின் முடிவு தனக்கு அதிருப்தி அளிப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Immigration has contributed immensely to America’s economic success, making it a global leader in tech, and also Google the company it is today. Disappointed by today’s proclamation – we’ll continue to stand with immigrants and work to expand opportunity for all.
— Sundar Pichai (@sundarpichai) June 22, 2020
தொழில்நுட்பத்துறையில் அமெரிக்கா தலைவராக விளங்குவதற்கு, புலம்பெயர்ந்த பணியாளர்களே காரணம் எனக் கூறிய அவர், அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு இந்தியர்களே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புலம்பெயர்ந்து வந்தவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றியுள்ளதாக கூறியுள்ள சுந்தர் பிச்சை, புலம்பெயர்ந்தோருடன் நின்று, அனைவருக்கும் வாய்ப்பை விரிவுபடுத்த பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments yet