0 Comments
Published on: Saturday, August 8th, 2020 at 10:42 AM
தனிமையில் எல்லை மீறிய காதல் ஜோடி… மறைந்திருந்து பார்த்த கும்பல் செய்த வேலை…
நெல்லை புறநகர் பகுதியில் தனியாக இருந்த காதலர்களை மிரட்டிய மர்ம நபர்கள் பணம், செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை புறநகர் பகுதியான ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை பகுதி ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியாகும். மாலை நேரங்களில் பைக் ரேஸ் பிரியர்கள், காதல் ஜோடிகள் அங்கு சென்று தனிமையில் சந்தித்துக் கொள்வதும், புதர்களில் மறைந்து எல்லை மீறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி கிடந்த அப்பகுதியில் தற்போது காதலர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல், கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு அப்பகுதியில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்வதும் அதிகரித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததால், அவர்கள் எல்லை மீறியதாக தெரிகிறது. இதை மறைந்திருந்து பார்த்த சிலர், அவர்கள் அருகில் சென்று இருவரையும் பிடித்து தரையில் அமர வைத்துள்ளனர்.
யார் என விபரங்களை கேட்டு வீட்டில் சொல்லிவிடுவதாக துன்புறுத்தி உள்ளனர். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடி விட்டது.
நடந்ததை வெளியில் சொன்னால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுதாக மிரட்டியதால், காதல் ஜோடி அதை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். ஆனால் மிரட்டல் கும்பல், காதலர்களை மிரட்டிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
இது காவல்துறை கவனத்திற்கு செல்ல, வீடியோவில் அவர்கள் சொன்ன பெயர் முகவரியை வைத்து விசாரித்தனர். காதலரின் வீட்டுக்கு சென்று அவரிடம் நடந்த சம்பவம் உண்மையா? என்பது குறித்து விசாரித்தனர். சம்பவம் உண்மைதான் என அவர் கூறியதும், மிரட்டல் நபர்கள் மீது புகார் ஒன்றை பெற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காதல் ஜோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments yet