0 Comments
Published on: Tuesday, May 26th, 2020 at 7:23 PM
கொரோனா வெறும் டிரைலர் தான், மெய்ன் பிக்சர இன்னும் பார்க்கலயே – மிரட்டும் வவ்வால் பெண்மணி..!
கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்கக் கூடும் என வவ்வால் பெண்மணி விடுத்திருக்கும் எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஊகான் நகரில் கடல் உணவு சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், சீனா அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஊகானில் வவ்வால் பெண்மணி என அறியப்படும் ஷி ஜெங்லி என்ற பிரபல வைரஸ் ஆய்வாளரே முதன்முதலில் கொரோனா வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர். இவரே சீனாவின் வவ்வால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர்.
ஊகான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளார். தொடர்ந்து மூன்றே நாட்களில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி கொரோனாவுக்கான தீர்வையும் கண்டறிந்துள்லார். ஆனால், சீன அரசு இந்த தகவலை அறிந்து, அவரை மிரட்டி தங்களுக்கு சாதகமாக பணியவைத்துள்ளது. ஆய்வாளர் ஷி கண்டறிந்த தகவல்களை சீனா உரிய காலத்தில் வெளிப்படுத்தியிருந்தால் கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும் என்பது மட்டுமின்றி, மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.
ஷி தற்போது வெளியிட்டுள்ள தகவல்களில் எதிர்காலத்திலும் உலக நாடுகள் ஏதும் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிச்சமிட்டு உள்ளார். தற்போது உலக நாடுகளை கடுமையாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் என்பது வெறும் ஒரு பனிப்பாறையின் முனை மட்டுமே எனவும், இன்னும் சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்கக் கூடும் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து எதிர்காலத்தில் தப்பித்துக் கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார் ஷி.
அரசியல் காரணங்களுக்காக அறிவியல் பயன்படுத்தப்படுவது உண்மையில் மிகவும் வருத்தமானது என குறிப்பிட்டுள்ள அவர், வைரஸ்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கமும், விஞ்ஞானிகளும் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரோனா வைரஸ் பரவல் போன்று, அடுத்த தொற்று நோய் பரவலால் மனித இனம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நாம் விரும்பினால், இயற்கையில் காட்டு விலங்குகளால் பரப்படும் இந்த அறியப்படாத வைரஸ்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விலங்குகள் தொடர்பில் நாம் ஆய்வு செய்ய தவறினால், கொரோனா வைரஸ் பரவலை விடவும் கொடிய ஒன்று எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது என்றும் ஷி ஜெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments yet